
இன்று பேராக் மாநில ம.இ.காவின் 2024/25 தவணைக்கான மூன்றாவது செயற்குழு கூட்டம் அதன் தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்களின் தலைமையில் ஈப்போவில் அமைந்துள்ள மாநில ம.இ.கா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத்தின் அனைத்து 24 தொகுதிகளைச் சார்ந்த நிர்வாக உறுபினர்கள், மாநில இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
மாநில இந்தியர்கள் மற்றும் கட்சியினை வலுப்படுத்தும் வியூகங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக அனைத்து தொகுதிகள் ரீதியிலான கிளைகளுடனான சந்திப்பு, மாநில முதல்வருடனான் மரியாதை நிமித்த சந்திப்பு மற்றும் இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிகழ்ச்சிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டன.
பேராக் மாநில ம.இ.காவின் கட்சி, சமுதாயப் பணிகள் முறையே நிறைவேற முழு அர்ப்பணிப்புடன் செயல்பட மாநில செயற்குழு உறுதி வழங்கியது.


